Winning entries could not be determined in this language pair.There were 2 entries submitted in this pair during the submission phase. Not enough entries were submitted for this pair to advance to the finals round, and it was therefore not possible to determine a winner.Competition in this pair is now closed. |
50 ஆண்டுகளுக்கு முன்பு, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவின் மேற்பரப்பில் தனது பாதத்தைப் பதித்த தருணம் உலகத்தைப் பிரம்மிப்பிலும் பெருமையிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. "மனிதன், இந்த நாளிலிருந்து, அவனது மனம் விரும்பும்படியும் அவனது புத்தி கூர்வு செயலில்படியும் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும், ... கிரகங்களுக்கு, விரைவிலோ பின்னரோ, மனிதன் செல்வது இப்போது உறுதி," என இந்தச் செய்தித்தாள் வாதிட்டது. ஆனால், இல்லை. நிலவில் கால் பதித்தல் என்பது ஒரு பிறழ்ச்சியாகும், ஒரு முடிவாக அடையப்பட்ட குறிக்கோள் அல்ல, ஆனால் அமெரிக்காவின் அசாதாரண திறன்களைக் குறிக்கும் ஒரு வழியாகும். அது ஒருமுறை செய்யப்பட்டால், மறுமுறை செய்யத் தேவையில்லை. 571 பேர் மட்டுமே கோளப்பாதையில் சென்றுள்ளனர்; 1972ஆம் ஆண்டு முதல், சிகாகோவைச் சேர்ந்த டெஸ் மொயினைத் விட யாரும் விண்வெளியில் அதிக தூரம் செல்லவில்லை. அடுத்த 50 ஆண்டுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். செலவுகளின் வீழ்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், சீன, இந்திய இலட்சியங்கள் மற்றும் விண்வெளி வளர்ச்சியின் துணிவுமிக்க சகாப்தத்திற்கு உறுதியளிக்கும் ஒரு புதிய தொழில்முனைவோர் தலைமுறை. அனைவருக்கும் வளமிக்க, சிறந்த தகவல் தொடர்புக்கான சுற்றுலாவை இது நிச்சயமாக உள்ளடக்கும்; இதன் நீண்ட பயணத்தில், இது கனிம சுரண்டலையும் பெருந்திரள் போக்குவரத்தையும் உள்ளடக்கலாம். விண்வெளி ஏறத்தாழ பூமியின் விரிவாக்கமாகவே மாறும்-இது அரசாங்கங்களுக்கும் மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரு அரங்காகலாம். ஆனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற, அமைதி காலத்திலும், தேவைப்பட்டால் போரிலும் ஆளும்படியான சட்ட அமைப்பை இந்த உலகம் உருவாக்க வேண்டும். இதுவரை விண்வெளியின் வளர்ச்சி பூமியின் செயல்பாட்டை எளிதாக்குவதில் கவனம் செலுத்துகிறது-முக்கியமாக ஒலி, ஒளிபரப்பு மற்றும் வழிசெலுத்தலுக்கான செயற்கைக்கோள் தகவல் தொடர்புகள். இப்போது இரண்டு விஷயங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. முதலாவதாக, புவிசார் அரசியல், பூமியின் தாழ்ந்த கோளப்பாதையின் ஆழங்களுக்கு அப்பால் மனிதர்களை அனுப்ப ஒரு புதிய உந்துதலைத் தூண்டுகிறது. 2035 க்குள் மக்களை நிலவில் தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது. 2024 க்குள் அமெரிக்கர்கள் மீண்டும் அங்கு திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் விரும்புகிறது. செலவுகளின் வீழ்ச்சி முன்பை விட மலிவான விலையைக் காட்டுகிறது. அப்போலோவின் விலை நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் (இன்றைய விலையில்). இப்போதுள்ள டிக்கெட்டின் விலை பல்லாயிரக்கணக்கான பில்லியன்கள் ஆகும். மனிதநேயம் அதன் விலங்குகளைத் தூக்கி எறிந்து அதன் விதியை மீண்டும் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கற்பனையான ‘வைல்ட் வெஸ்ட்’ போன்ற ஆட்சியற்ற எல்லையாக விண்வெளியைக் காட்டுவது தவறு. விண்வெளிக்கான வாக்குறுதியை நிறைவேற்ற ஆட்சிமுறை தேவை, எஃகு கம்பிகள் மற்றும் சோயாபீன்களின் நிலம்சார் வர்த்தகத்திற்கான விதிகளை உலகம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நேரத்தில், இதைக் கேட்பது கடினமான வேண்டுகோளாகத் தோன்றலாம். ஆனால், அது இல்லாமல், பூமிக்கு அப்பால் உள்ள எல்லாவற்றின் ஆற்றலும் நிறைவேறும் வரை இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்கும். மோசமான நிலையில், விண்வெளி பூமியின் சிக்கல்களை அதிகரிக்கக்கூடும். | Entry #27155 — Discuss 0 — Variant: Not specified
|
நீல் ஆம்ஸ்ட்ராங் 50 ஆண்டுகளுக்கு முன் நிலவின் மேற்பரப்பில் தனது கால் பதித்த தருணம் உலகிற்கு பிரமிப்பும் பெருமையும் வியப்பும் அளித்தது. இந்தப் பத்திரிகை, "இந்நாளில் இருந்து மனிதன் பிரபஞ்சத்தில் தன் மனம் விரும்பிய, அவனது கூர்மதி முயன்று கண்டுபிடிக்கக்கூடிய, எந்த இடத்துக்கும் செல்ல முடியும்... கிரகங்களுக்கு பிற்காலத்தில், ஏன் வெகு சீக்கிரமாகவே கூட, மனிதன் போவது இப்போது நிச்சயம்" என்று விளக்கி எழுதிற்று. ஆனால், அப்படி நடைபெறவில்லை. நிலவில் இறங்கியது ஒரு பிறழ்ச்சி; அடைய வேண்டி அடைந்த ஒரு இலக்காக இல்லாமல், அமெரிக்காவின் அசாதாரணமான திறன்களை அடையாளம் காட்டும் ஒரு வழிமுறையாக அது இருந்தது. அது நடந்துவிட்ட பின்பு, மீண்டும் அது தேவைப்படவில்லை. 571 பேர் மட்டுமே வட்டணையில் சென்றுள்ளனர்; 1972 முதல், டெஸ் மோன்ஸ் சிகாகோவிலிருந்து இருக்கும் தூரத்தை விடவும் யாரும் விண்வெளியில் முன்பைவிட அதிக தூரம் சென்றுவிடவில்லை. அடுத்த 50 ஆண்டுகள் மிகவும் மாறுபட்டுக் காணப்படும். விலை வீழ்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், சீனா மற்றும் இந்தியாவின் பேராவல்கள், மற்றும் தொழில் முனைவோரின் ஒரு புதிய தலைமுறை ஆகியவை விண்வெளி வளர்ச்சியில் ஒரு தீரமிக்க சகாப்தம் தோன்றும் என்று நம்பிக்கையளிக்கின்றன. அது கிட்டத்தட்ட நிச்சயமாக பணக்காரர்களுக்கு சுற்றுலாத் திட்டங்களையும் அனைவருக்கும் சிறந்த தகவல் தொடர்பு இணையங்களையும் ஏற்படுத்தும்; நீண்டகாலம் சென்றபின் அது கனிமப் பயன்பாட்டையும், பெருந்திரள் போக்குவரத்தையும் உள்ளடக்கக் கூடும். விண்வெளியானது பூமியின் ஒரு விரிவாக்கம் போல் — அரசாங்கங்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட தனிநபர்களுக்குமான ஒரு அரங்கமாக — மாறிவிடும். ஆனால், இந்த நம்பிக்கை நிறைவேறுவதற்கு, விண்வெளி குறித்த —அமைதிக்காலத்திற்கான, தேவை நேரிடின் போர்க்காலத்துக்குமான, ஒரு சட்ட அமைப்பை உலகம் உருவாக்குவது தேவையாகும். இதுவரை விண்வெளி வளர்ச்சியானது பூமியில் உள்ள செயற்பாட்டிற்கு வசதியளிப்பதிற்கு, குறிப்பாக ஒலிபரப்புக்கும் பயணவியக்கத்திற்குமான செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இப்போது இரண்டு விஷயங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, உலக அரசியல், தாழ் புவி வட்டணையினைத் தாண்டி மனிதர்களை அனுப்ப ஒரு புதிய உந்தலைத் தூண்டிவிடுகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள் மக்களை நிலவில் இறக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கர்களை அங்கே அனுப்ப விழைகிறது. விலை வீழ்ச்சி முன்பை விட இந்த படாடோபத்தை மிகவும் கட்டுபடியாக ஆக்குகிறது. அப்பல்லோவை அனுப்ப பல்லாயிரம் கோடி ரூபாய்கள் (இன்றைய பணத்தில்) செலவாயின. இப்போது பல நூறு கோடி ரூபாய்கள் பயணச் சீட்டின் விலையாகும். [...] விண்வெளியை ஒரு வியன்புனைந்த காட்டுத்தனமான மேற்காக, மனித குலம் தன் கட்டுப்பாடுகளைத் தூக்கி எறிந்து விட்டு தன் விதியை மறுபடி கண்டுபிடிக்கும் குழப்பம் நிறைந்த எல்லைப்புறமாக, ஆக்குவதென்பது தவறாகும். விண்வெளியின் பயனை நல்முறையில் அடைய நிர்வாகம் தேவையாகும். எஃகுக்கட்டிகள் மற்றும் சோயா மொச்சை போன்றவற்றின் தரைமுறை வர்த்தகம் குறித்த சட்டங்கள் குறித்தே உலக நாடுகள் ஒத்துவரயாத ஒரு நேரத்தில், இது பெரிய எதிர்பார்ப்பு போல் தோன்றலாம். ஆனால், இது இல்லாவிட்டால், பூமிக்கு அப்பால் உள்ள அனைத்து வெளியின் ஆற்றலும் பயனளிப்பதற்கு இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிவரும். உறு மோசமாக, விண்வெளியால் பூமியின் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். | Entry #28054 — Discuss 0 — Variant: Not specified
|